நடராஜன் குறித்து சர்ச்சையாக பேசிய ஷேன் வார்னே: கொந்தளித்த ரசிகர்கள்
இந்திய வேகப்பந்துவீச்சாளர் நடராஜன் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் ஷேன் வார்னேக்கு பலரும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். இந்தியா- ஆஸ்திரேலியா மோதும் நான்காவது டெஸ்ட் போட்டி நடந்து வருகிறது, இரு அணிகளும் தொடரை வெல்லும் முனைப்பில் இருக்கின்றன.
இந்நிலையில் நடராஜன் வீசிய நோ பால் குறித்து ஷேன் வார்னே தெரிவித்த கருத்து சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவர் கூறுகையில், நடராஜன் வீசிய நோ பால்கள் எனக்கு சுவாரசியமாக தெரிந்தது. இந்த போட்டியில் மட்டும் அவர் ஏழு நோ பால்களை வீசினார்.
அது எல்லாமே மிகப் பெரியது, இதில் ஐந்து நோ பால்கள் அவர் வீசிய ஓவரின் முதல் பந்து, நாங்கள் அனைவரும் நோ பால் வீசியுள்ளோம், குறிப்பாக ஓவரின் முதல் பந்தை மட்டும் நோ பாலாக வீசியது சுவாரசியமானது தான் என தெரிவித்தார்.
இதைப்பார்த்த பலரும் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர், ஷேன் வார்னேவின் இந்த கருத்து ஸ்பாட் பிக்ஸிங்சில் ஈடுபட்டுள்ளார் என்பதை குறிப்பது போன்று இருப்பதால் கண்டனங்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.