இந்திய அணியின் பவுலிங் - பேட்டிங் - பீல்டிங் பயிற்சியாளர்கள் யார்? தமிழ் வீரரை குறிவைக்கும் கம்பீர்
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராகியுள்ள கம்பீர் மீது பெரிய நம்பிக்கையை வைத்துள்ளது அணி நிர்வாகம்.
பயிற்சியாளர்
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக அதிகாரபூர்வமாக பொறுப்பேற்றுள்ளார் கம்பீர். அவர் அடுத்த 3 ஆண்டுகளுக்கு அணியின் பயிற்சியாளராக நீடிக்கிறார். அவர் மீது இந்திய அணி நிர்வாகமும், ரசிகர்களும் பெரிய நம்பிக்கையை வைத்துள்ளார்கள்.
அவரை அடுத்து இந்திய அணிக்கு யார் யார் மற்ற பிரிவுகளுக்கு தலைமை பயிற்சியாளராக வருவார்கள் என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது. அதில், சிலரின் பெயர்கள் அடிபடுகிறது. கம்பீருடன் கொல்கத்தா அணியில் பேட்டிங் பயிற்சியாளராக இருந்த அபிஷேக் நாயர் கம்பீரை பெரிதாக கவர்ந்துள்ளார்.
தமிழர்..
அதனால் அவரே இந்திய அணிக்கும் நியமிக்கப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு உள்ளது.அதே போல, பௌலிங்கில் இரண்டு பெரிய தலைகள் போட்டி போடுகின்றன.
முன்னாள் வீரர்கள் ஜாகீர் கான் அல்லது பாலாஜி மத்தியில் இதற்காக போட்டியுள்ளது. இதனை தொடர்ந்து பீல்டிங்கிற்கு டி திலீப் தொடருவார் என்றே தெரிகிறது.
இந்த அறிவிப்புகள் இன்னும் ஓரிரு நாட்களில் வெளியாகும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.,