கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் அசோக் டின்டா
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் அசோக் டின்டா அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெற்றுள்ளார். மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த 36 வயதான அசோக் டின்டா, இந்திய அணிக்காக 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 12 விக்கெட்டுகளையும் , 9 டி20 போட்டிகளில் விளையாடி 17 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.
116 முதல் தரப்போட்டிகளில் விளையாடியுள்ள டிண்டா 420 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். கடந்த 2009-ம் ஆண்டு ஐபிஎல் போட்டிக்குள் நுழைந்த அசோக் டின்டா ஏராளமான அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
டெல்லி டேர்டெவில்ஸ், கொல்கத்தா நைட்ரைடர்ஸ், புனே வாரியர்ஸ், ரைசிங் புனே சூப்பர்ஜெயின்ட்ஸ், ஆர்சிபி ஆகிய அணிகளுக்காக திண்டா விளையாடியுள்ளார்.78 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள டிண்டா 69 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் அசோக் டின்டா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்து நான் இன்று ஓய்வு பெறுகிறேன். இதுதொடர்பாக பிசிசிஐ மற்றும் கோவா கிரிக்கெட்அகாடெமிக்கும் மின்அஞ்சல் அனுப்பிவிட்டேன்.
எனக்கு 2005-06ம் ஆண்டு சீசனில் மகாராஷ்டிரா அணிக்கு எதிராக களமிறங்க வாய்ப்பளித்து அறிமுகம் செய்த கங்குலிக்கு நன்றி தெரிவிக்கிறேன். நான் கிரிக்கெட் வாழ்வில் பல்வேறு உயர்ந்த நிலையை அடைவதற்கு பலரும் எனக்கு உதவி செய்துள்ளனர், அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவிக்கிறேன் என கூறியுள்ளார்.

தையிட்டி விகாரைக்கு பெருமளவு சிங்கள மக்களை அழைத்துவர திட்டம் : கஜேந்திரன் விடுத்துள்ள அழைப்பு IBC Tamil
