சென்னை நோக்கி வந்த கொல்லம் ரயிலில் பெரிய விரிசல் - பெரும் விபத்து தவிர்ப்பு!
கேரளத்தில் இருந்து சென்னை வந்த ரயிலின் பெட்டியில் விரிசல் இருப்பது கண்டறியப்பட்டது.
பெட்டியில் விரிசல்
கேரளா, கொல்லத்தில் இருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த ரயிலின் எஸ்3 பெட்டியில் விரிசல் ஒன்று இருப்பது கண்டறியப்பட்டது.
அதனையடுத்து, ரயில் செங்கோட்டையில் நிறுத்தப்பட்டது. ரயில் பெட்டியில் விரிசலானது அடிவாரத்தில் காணப்பட்டது. தொடர்ந்து, விரிசல் காணப்பட்ட ரயில் பெட்டி, கழற்றிவிடப்பட்டது.
விபத்து தவிர்ப்பு
அதனையடுத்து, மற்றொரு பெட்டி மதுரையில் இணைக்கப்பட்டது. இதனால் அரை மணி நேரம் ரயில் தாமதமாக புறப்பட்டு சென்றது. தொடர்ந்து ரயில் சென்னை நோக்கி பயணத்தை தொடர்ந்தது.
இந்த சம்பவம் மக்கள் மத்தியில் சற்று பதற்றத்தை ஏற்படுத்தியது. பெட்டியில் விரிசல் கண்டறியப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.