Wednesday, May 7, 2025

தண்டவாளத்தில் போட்டோஷூட் - திடீரென வந்த ரயிலால் 90 அடி பள்ளத்தில் குதித்த புதுமண தம்பதி!

India Rajasthan
By Jiyath 10 months ago
Report

தண்டவாளத்தில் போட்டோஷூட் எடுத்த தம்பதி ரயில் வந்ததால் 90 அடி பள்ளத்தில் குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

போட்டோஷூட் 

ராஜஸ்தான் மாநிலம் பாக்டி நகரில் உள்ள காலால் கி பிபாலியான் பகுதியைச் சேர்ந்த தம்பதியினர் ராகுல் (22) - ஜான்வி (20). சமீபத்தில் தான் இவர்களுக்கு திருமணம் நடைபெற்றுள்ளது . இதனால் ராஜஸ்தானில் உள்ள பாலியில் போட்டோஷூட் எடுக்க அவர்கள் திட்டமிட்டனர்.

தண்டவாளத்தில் போட்டோஷூட் - திடீரென வந்த ரயிலால் 90 அடி பள்ளத்தில் குதித்த புதுமண தம்பதி! | Couple Jumps From Rail Bridge Into 90 Feet Gorge

அங்கு 90 அடி பள்ளத்துக்கு மேல் பழமையான ரயில் மேம்பாலம் உள்ளது. அந்த ரயில் மேம்பால தண்டவாளத்தில் ராகுல் - ஜான்வி தம்பதி நின்று புகைப்படம் எடுத்துக்கொண்டு இருந்தனர்.

திடீரென மணமகளின் தாய், தந்தையை அறைந்த மணமகன் - அடுத்து நடந்த பகீர் சம்பவம்!

திடீரென மணமகளின் தாய், தந்தையை அறைந்த மணமகன் - அடுத்து நடந்த பகீர் சம்பவம்!

தீவிர சிகிச்சை 

அப்போது எதிர்பாராத விதமாக அந்த தண்டவாளத்தில் திடீரென ரயில் வந்தது. ஆனால், ராகுல் - ஜான்வி தம்பதியால் உடனடியாக அங்கிருந்து ஓடிவர முடியவில்லை. அதே சமயம் ரயில் மோதினால் உயிர் பிழைப்பது கடினம் என்பதால், அவர்கள் ஒன்றாக பாலத்திலிருந்து 90 அடி பள்ளத்தை நோக்கி குதித்தனர்.

தண்டவாளத்தில் போட்டோஷூட் - திடீரென வந்த ரயிலால் 90 அடி பள்ளத்தில் குதித்த புதுமண தம்பதி! | Couple Jumps From Rail Bridge Into 90 Feet Gorge

இதில், படுகாயமடைந்த அந்த தம்பதியினரை தீயணைப்பு வீரர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு இருவரும் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிலையில், 2 பேரின் உயிருக்கும் எந்த ஆபத்தும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.