கள்ளக்காதலனுடன் தூக்கிட்ட ஆசிரியை - ஊருக்கே தெரிந்த உண்மையால் சோகம்!

Death trichy
By Sumathi Aug 08, 2024 11:45 AM GMT
Report

ஆசிரியை கள்ளக்காதலனுடன் தூக்கிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தகாத உறவு

திருச்சி, சீத்தம்பட்டியைச் சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி கீர்த்தனா(23). இவர்களுக்கு 5 வயதில் மகள் ஒருவர் உள்ளார். தனியார் நர்சரி பள்ளியில் கடந்த சில மாதங்களாக ஆசிரியையாக வேலை செய்து வந்துள்ளார்.

கீர்த்தனா - கிருஷ்ணமூர்த்தி

இந்நிலையில், காட்டுப்புத்தூர் அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி(29). ஐடிஐ படித்துவிட்டு விவசாயம் செய்து வந்துள்ளார். இவருடன் கீர்த்தனாவிற்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

20 வயது மாணவனுடன் 42 வயது பெண் தகாத உறவு - உல்லாசத்தில் அரங்கேறிய கொடூரம்!

20 வயது மாணவனுடன் 42 வயது பெண் தகாத உறவு - உல்லாசத்தில் அரங்கேறிய கொடூரம்!

ஜோடி தற்கொலை

அது நாளடைவில் தகாத உறவாக மாறியுள்ளது. தொடர்ந்து, இருவருடன் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்துள்ளனர். ஒருகட்டத்தில், இந்த கள்ளக்காதல் விவகாரம் இருவரது வீட்டிற்கும் தெரியவந்துள்ளது.

கள்ளக்காதலனுடன் தூக்கிட்ட ஆசிரியை - ஊருக்கே தெரிந்த உண்மையால் சோகம்! | Couple In Affair Commits Suicide Trichy

இதனால், அவமானமடைந்த இருவரும் அப்பகுதியில் உள்ள தோட்டத்தின் மோட்டார் அறை கொட்டகையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் உடல்களை மீட்டு, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.