அண்ணாமலையார் கோவிலில் தம்பதி செய்த வேலை - பக்தர்கள் அதிர்ச்சி
அண்ணாமலையார் கோயிலில் தம்பதியினர் செய்த செயல் ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அசைவ சாப்பாடு
உலக புகழ்பெற்ற கோவில் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். இங்குள்ள 14 கிலோ மீட்டர் அளவிலான சுற்றுவட்டப்பாதையில் மாதம்தோறும் பவுர்ணமி அன்று
லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து அண்ணாமலையார் வணங்குவது வழக்கம். இக்கோவிலுக்கு தினமும் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த கோவிலின் ஐந்தாம் பிரகாரத்தில் அமர்ந்து கொண்டு தம்பதியினர் அசைவ உணவு சாப்பிட்டிக் கொண்டிருந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பக்தர்கள் கோயில் வளாகத்தில் உள்ள இந்துசமய அறநிலையத்துறை அலுவலகத்தில் புகார் அளித்தனர்.
போலீஸார் எச்சரிக்கை
தொடர்ந்து இருவரும் காவல் துறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டனர். அதில், ராமலிங்கனார் தெருவை சேர்ந்த ரமேஷ் மற்றும் அவரது மனைவி என்பது தெரியவந்தது. மேலும் முட்டை குஷ்கா பார்ச்சல் வாங்கிக்கொண்டு கோபுரத்தின் உள்ளே வந்து ஐந்தாம் பிரகாரத்தில் அமர்ந்து சாப்பிட்டது தெரியவந்தது.
இதனையடுத்து இதுபோன்று செய்யக்கூடாது என்று கூறி போலீஸார் இருவரையும் எச்சரித்து அனுப்பி வைத்தனர். மேலும், கொண்டு செல்லும் பொருட்களும் பைகளும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படும்.
அப்படி இருக்கும் போது இந்த தம்பதியினர் பிரியாணியை எப்படி கொண்டு வந்தார்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.