59 வயதில் விவாகரத்து..69 வயதில் மீண்டும் இணைந்த ஜோடி - நெகிழ்ச்சி சம்பவம்!
59 வயதில் விவாகரத்து வேண்டிய ஜோடிகள் 69 வயதில் மீண்டும் இணைந்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விவாகரத்து
கர்நாடகா, தும்கூரு பகுதியைச் சேர்ந்தவர் முதியவர்(59). இவர் தனது மனைவியுடனான கருத்து வேறுபாட்டால் விவாகரத்து வேண்டி வழக்குத் தொடுத்துள்ளார். அந்த வழக்கு 10 வருடங்களுக்கும் மேல் நிலுவையில் இருந்துள்ளது.
இந்நிலையில், 10 வருடங்களுக்குப் பிறகு நடைபெற்ற லோக் அதாலத் முறையில் அந்த வழக்கும் பங்கேற்றது. அதில் இருவரிடமும் சமரசம் பேசப்பட்டுள்ளது. அதில் சமாதானம் அடைந்த தம்பதியினர் சேர்ந்து வாழ விருப்பம் தெரிவித்துள்ளனர்.
நெகிழ்ச்சி
இவர்கள் இணைவதற்கு, இவர்களது குடும்பத்தினரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இதனால் மீண்டும் இணைவதில் மகிழ்ச்சி அடைவதாக தம்பதிகள் தெரிவித்துள்ளனர். மேலும், விவாகரத்து கேட்ட நீதிமன்றத்திலேயே இருவரும் மாலை மாற்றி உறவை மீண்டும் தொடங்கியுள்ளனர்.
அதனையடுத்து, இந்த தம்பதியுடன் சேர்ந்து மேலும் 5 தம்பதிகள் தங்கள் முடிவுகளை மாற்றிக்கொண்டு விவாகரத்தைத் திரும்பப் பெற்று நீதிமன்ற வளாகத்திலேயே மாலையை மாற்றி ஒன்றாகச் சேர்ந்தனர்.