பிரித்தானியா நிறுவன தடுப்பூசிக்கு தடைவிதிக்கும் நாடுகள்: என்ன காரணம்?

covid vaccine british
By Jon Mar 14, 2021 01:52 PM GMT
Report

பிரித்தானியாவின் அஸ்ட்ரா ஜெனிக்கா நிறுவனம் தயாரிக்கும் தடுப்பு மருந்தை பயன்படுத்தும் பெரும்பாலானோருக்கு ரத்தம் உறையும் பிரச்சனை ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. பொதுவாக தடுப்பு மருந்துகளை பயன்படுத்தினால் காய்ச்சல், தலைவலி, உடல் வலி, சோர்வு, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

ஆனால் அஸ்ட்ரா ஜெனிக்கா நிறுவனம் தயாரிக்கும் மருந்தை பயன்படுத்தும் பெரும்பாலானோருக்கு ரத்தம் உறையும் பிரச்சனை ஏற்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. ஆஸ்திரியா நாட்டில் 42 வயதான செவிலியர் ஒருவருக்கு இந்த தடுப்பூசி போடப்பட்டது. இதனால் அவருக்கு ரத்தம் உறைதல் பிரச்சினை ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைந்துள்ளார்.

இதையடுத்து, குறித்த மருந்து பயன்பாட்டை ஆஸ்திரியா சுகாதார நிர்வாகம் நிறுத்திக் கொண்டது. இதுதவிர எஸ்டானியா, லட்வியா, லித்வானியா, லக்சம்பர்க் ஆகிய நாடுகளும் அஸ்ட்ரா ஜெனிக்கா தடுப்பு மருந்தை பயன்படுத்துவதை நிறுத்திக் கொண்டன. தற்போது டென்மார்க்கிலும் இந்த மருந்துக்கு தடைவிதிக்கப்பட்டது.

இது குறித்து அந்த நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறும் போது, மார்ச் 9-ம் திகதி ஐரோப்பியா நாடுகளில் அஸ்ட்ரா ஜெனிக்கா மருந்து செலுத்தியவர்களில் 22 பேருக்கு ரத்தம் உறைந்ததாக புகார்கள் எழுந்தன. எனவே அந்த மருந்து பயன்பாடு எங்கள் நாட்டில் தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது என்று தெரிவித்தனர். டென்மார்க், நோர்வே மற்றும் ஐஸ்லாந்து உள்ளிட்ட பல ஐரோப்பிய நாடுகளும் அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை தற்காலிகமாக நிறுத்துவதாகக் கூறியுள்ளன.

17 நாடுகளுக்கு சமீபத்தில் அஸ்ட்ராசெனெகா அனுப்பிய கொரோனா மருத்துகளில் இருந்தே ரத்தம் உறைதல் பிரச்சனை ஏற்பட்டிருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் பிரித்தானியாவில் இதுபோன்ற பிரச்சனைகள் ஏதும் இல்லை எனவும், வழமையாக பொதுமக்களுக்கு அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகள் செலுத்தி வருவதாகவும் சுகாதார அமைப்புகள் தெரிவித்துள்ளன.