நெல்லையில் தொடரும் படுகொலை.. ஊராட்சி உறுப்பினரை சரமாரியாக வெட்டி சாய்த்த கும்பல் - கொடூரம்!
ஊராட்சி உறுப்பினரை அரிவாளால் வெட்டி கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொடூர கொலை
திருநெல்வேலி மாவட்டம், கீழநத்தம் வடக்கூரை சேர்ந்தவர் ராஜாமணி (33). இவர் அந்த ஊரின் ஊராட்சி மன்ற உறுப்பினராக இருந்து வந்தார். இவர் நேற்று இவர் எப்பவும்போல் ஆடு மேய்ச்சலுக்கு சென்றுள்ளார், அப்பொழுது மேய்ச்சல் முடிந்து அவர் திருப்பும்பொழுது திடீரென அவரை வழிமறித்த கும்பல் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி சென்றனர்.
அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அருகில் இருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர், மேலும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
விசாரணை
இந்நிலையில், அவர் இறந்ததும் அவரது ஆதரவாளர்கள் மருத்துவமனையின் முன் சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து காவல் துறை அதிகாரிகளும், வருவாய்த் துறையினரும் அங்குவந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும், கொலையாளியை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அங்கு அசம்பாவிதத்தை தடுக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டன. தொடர்ந்து, போலீசார் இந்த கொலையின் நோக்கம் என்ன முன்விரோதம் காரணமாகவா? அல்லது வேறு என்ன காரணம்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.