சச்சினுக்கு கொரோனா : குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை!
covid
india
cricket
sachin
By Jon
கொரோனா பரவல் சமீப காலமாகக் குறைந்துவந்த நிலையில் தற்போது மீண்டும் வேகமெடுக்கத் துவங்கியுள்ளது. மகராஷ்டிரா, தமிழகம் உட்பட பல மாநிலங்களில் தொற்று அதிகரித்துக் காணப்படுகிறது.
இந்நிலையில், தற்போது சச்சின் டெண்டுல்கருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ட்விட்டர் பதிவிட்டுள்ள அவர்.
— Sachin Tendulkar (@sachin_rt) March 27, 2021
“கொரோனா அறிகுறி தென்பட்டதால், தானாக முன்வந்து பரிசோதனை மேற்கொண்டேன். அதில் எனக்குத் தொற்று உறுதியாகியுள்ளது. இதனையடுத்து வீட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
யாருக்கும் தொற்று உறுதியாகவில்லை.
தற்போது மருத்துவர்களின் அறிவுரைப்படி வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டேன். மருத்துவர்கள் அனைவருக்கும் நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.