இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று..ஒரே நாளில் 17 ஆயிரம் பேர் பாதிப்பு..!

COVID-19 Government Of India
By Thahir Jun 27, 2022 04:12 AM GMT
Report

இந்தியாவில் கொரோனா தொற்று இன்று ஒரே நாளில் அதிகரித்துள்ளது.

ஒரே நாளில் அதிகரித்த கொரோனா

மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட கொரோனா தொற்று தொடர்பான அறிக்கையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 17 ஆயிரத்து 73 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது நேற்றைய பாதிப்பான 11 ஆயிரத்து 739 மற்றும் நேற்று முன் தின பாதிப்பான 15 ஆயிரத்து 940-ஐ விட அதிகமாகும்.

இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று..ஒரே நாளில் 17 ஆயிரம் பேர் பாதிப்பு..! | Corona Infection On The Rise In India

இதனால், நாட்டில் இதுவரை கொரோனாவால் பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 34 லட்சத்து 7 ஆயிரத்து 46 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 15 ஆயிரத்து 208 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 27 லட்சத்து 87 ஆயிரத்து 606 ஆக அதிகரித்துள்ளது.

அதிகரித்த உயிரிழப்பு 

நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 94 ஆயிரத்து 420 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தாக்குதலுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 25 ஆயிரத்து 20 ஆக அதிகரித்துள்ளது.

அதேவேளை நாடு முழுவதும் இதுவரை 197 கோடியே 11 லட்சத்து 91 ஆயிரத்து 329 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.