பெங்களூர் அணியின் தொடக்க வீரருக்கு கொரோனா தொற்று உறுதி
பெங்களூரு அணியின் தொடக்க அதிரடி வீரர் தேவ்தத் படிக்கல் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. ஐபிஎல் 2021 வருகிற ஏப்ரல் 9ம் தேதி சென்னை சேப்பாக்க மைதானத்தில் மும்பை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின் மூலம் தொடங்குகிறது.
இதற்காக கடந்த வரம் மும்பை மற்றும் பெங்களூரு அணி வீரர்கள் கடந்த வாரம் சென்னை வந்தடைந்தனர் இந்த நிலையில் பெங்களூரு அணியின் தொடக்க வீரர் தேவ்தத் படிக்கல் காரோண தோற்றால் பாதிக்கப்பட்டது கண்டறியப்பட்டது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக கடந்த சீசனில் அறிமுகமாகி 473 ரன்கள் (15 ஆட்டம்) குவித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.
இதையடுத்து அவர் உடனடியாக அணியை விட்டு பிரித்து தனிமைப்படுத்தப்பட்டார். மருத்துவகுழுவினர் அவரை கண்காணித்து வருகிறார்கள்.
கட்டாயம் 10 நாட்கள் தனிமைப்படுத்தும் நடைமுறையை கடைபிடிக்க வேண்டி இருப்பதால் வருகிற 9-ந்தேதி சென்னையில் நடக்கும் மும்பை இ்ந்தியன்சுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 20 வயதான தேவ்தத் படிக்கல் விளையாட வாய்ப்பில்லை. இது பெங்களூரு அணிக்கு நிச்சயம் பின்னடைவு தான் என்பதில் சந்தேகமில்லை.