சென்னை அணி நிர்வாகத்தில் முக்கிய நபருக்கு கொரோனா தொற்று
covid19
chennai
csk
ipl
By Jon
சென்னை அணியில் பணியாற்றி வரும் முக்கிய நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐபிஎல் 2021 இன்னும் சில தினங்களில் மிகவும் கோலாகலமாக தொடங்கவுள்ளது. இதற்காக ஒவ்வொரு அணியும் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் மும்பை அணியும் பெங்களூரு அணியும் சென்னையில் மோதுகின்றனர்.
இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சமூக ஊடகப் பிரிவில் பணியாற்றும் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரை அணி நிர்வாகம் தனிமைப்படுத்தியுள்ளது.
தற்போது வரையில் அந்த நபர் சென்னை அணி வீரர்களோடு நெருங்கி பழகாததால் வீரர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என அணியின் நிர்வாகம் தெரிவித்துள்ளது.