பேரழிவு: தடைகளை அகற்றிய சீனா - நடுக்கத்தில் உலக நாடுகள்!
சீனாவில் அதிகரித்து வரும் கோவிட்-19 இன் புதிய வகை BF.7 பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
தடைகள் அகற்றம்
கொரோனாத் தொற்றின் பாதிப்புகள் தொடர்ந்து குறைந்ததால், உலக நாடுகளின் பெரும்பாலானவை கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கி, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பின. ஆனால், அப்போதும் சீனாவில் கடுமையான கட்டுப்பாடுகள், லாக்டவுன், தடைகள், பயணக் கட்டுப்பாடுகள் தொடர்ந்தன.
ஆனால், தற்போது உலகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில், சர்வதேச நாடுகளில் பல, கட்டுப்பாடுகளை அதிகரித்து வரும் நிலையில் சீனா மட்டும் தடைகளை அகற்றி வருகிறது. கோவிட் -19 இன் புதிய மாறுபாடு பாகிஸ்தானுக்குள் எளிதாக நுழைய முடியும்.
பயத்தில் பாகிஸ்தான்
இது பூஜ்ஜிய-கோவிட் கொள்கையை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளது என்று NCOC தெரிவித்துள்ளது. சீனாவில் அதிகரித்து வரும் கோவிட்-19 இன் புதிய வகை BF.7, அண்டை நாடான பாகிஸ்தானுக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் என அந்நாட்டு தேசிய கட்டளை மற்றும் செயல்பாட்டு மையம் எச்சரித்துள்ளது.
இருப்பினும் பாகிஸ்தான் இந்த தொற்றுநோயை தடுக்க தயாரிப்புகளை மேற்கொண்டுள்ளது.
மூன்று ஆண்டுகளாக கொரோனா தொற்றுநோய் தொடங்கிய பின்னர், சீனா தடைகளை நீக்கியுள்ளது உலக நாடுகளை கலக்கமடைய செய்துள்ளது.