இனி கொரோனா பாதிப்புகளை சொல்லப் போவதில்லை - சீனா திடீர் முடிவு!

COVID-19 China Virus
By Sumathi Dec 25, 2022 06:32 AM GMT
Report

 சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வைரஸ் தொற்று

சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் உள்ளது. தற்போது பரவி வரும் தொற்று பாதிப்பு முந்தைய அலைகளை விட அதிவேகம் கொண்டுள்ளது.தலைநகர் பீஜிங்கில் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்காக அமைக்கப்பட்ட தகனம் செய்யும் இடத்தில் தினமும் உடல்கள் மேல் நிரம்பி வழிகின்றன.

இனி கொரோனா பாதிப்புகளை சொல்லப் போவதில்லை - சீனா திடீர் முடிவு! | China Stop Publishing Daily Covid Cases

அதில், சீனாவில் கரோனாவின் ஒமிக்ரான் பி.எப்.7 என்ற வகை வைரஸ் அதிவேகமாகப் பரவி வருகிறது. தற்போதைய நிலையில் அந்த நாட்டில் தினமும் 10 லட்சம் பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்படுகிறது.

சீனா அதிரடி

நாள்தோறும் 5,000 பேர் உயிரிழக்கின்றனர். கடந்த 3 ஆண்டுகளாக தினசரி பாதிப்புகளாஇ வெளியிட்டு வந்த நிலையில், திடீரென கொரோனா தொற்றின் தினசரி பாதிப்புகளை வெளியிடப்போவதில்லை என சீனாவின்,

தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால் எதற்காக வெளியிடப் போவதில்லை என்ற காரணத்தை தெரிவிக்கவில்லை.