அதிக சவுண்ட் எழுப்பிய புல்லட் சைலன்ஸர்.. தடுத்த போலீசை நடுரோட்டில் இளைஞர் செய்த சம்பவம்!

Delhi India Crime
By Swetha Oct 28, 2024 04:00 PM GMT
Report

அதிக ஒலி எழுப்பும் பைக்கில் வந்த இளைஞர் போலீசாரை தாக்கியது அதிர்ச்சி அளிக்கிறது.

 சைலன்ஸர்..

டெல்லியில் போக்குவரத்து விதிகளை மீறி அதிக ஒலி எழுப்பும் சைலன்சர் பொருத்திய பைக்கில் இளைஞர் வந்துள்ளார். அவரை போலீசார் தடுத்தி நிறுத்தினர். இதனால் கோவப்பட்ட இளைஞர் தடுத்த போலீசாரை சரமாரியாக தாக்கியுள்ளார்.

அதிக சவுண்ட் எழுப்பிய புல்லட் சைலன்ஸர்.. தடுத்த போலீசை நடுரோட்டில் இளைஞர் செய்த சம்பவம்! | Cops Got Attacked By Son Father For Stopping Bike

பின்னர் தாக்குதலில் ஈடுபட்ட இளைஞரை அவரது தந்தையுடன் சேர்த்து போலீசார் கைது செய்தனர். ஆசிப் என்ற இளைஞர் ராயல் என்பீல்டு பைக்கில் வந்துள்ளார். போலீசார் அவரது பைக்கை சோதனை செய்தபோது விதிகளை மீறி அதிக ஒலி எழுப்பும் சைலன்சரை அவர் பொருத்தியுள்ளார் என்று கண்டு பிடித்தனர்.

நடுரோட்டில் தாக்கப்பட்ட கள்ளக்காதல் ஜோடி; வீடியோ வைரல் - வேடிக்கை பார்த்த மக்கள்!

நடுரோட்டில் தாக்கப்பட்ட கள்ளக்காதல் ஜோடி; வீடியோ வைரல் - வேடிக்கை பார்த்த மக்கள்!

நடுரோட்டில் 

உடனே ஆசிப் அவரது தந்தை ரியாசுதீனுக்கு போன் செய்து வரவழைத்து பைக்கை எடுத்துச்செல்ல முயன்றுள்ளார். அதை அங்கிருந்த போலீஸ் தடுக்க முயன்றுள்ளார். அப்போது ரியாசுதீன் போலீசை பிடிக்க ஆசிப் அவரை தாக்கியுள்ளார்.

அதிக சவுண்ட் எழுப்பிய புல்லட் சைலன்ஸர்.. தடுத்த போலீசை நடுரோட்டில் இளைஞர் செய்த சம்பவம்! | Cops Got Attacked By Son Father For Stopping Bike

மேலும் அங்கிருந்த சில போலீசாரையும் அவர் தாக்கியுள்ளார். இதனையடுத்து, போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தது, தாக்கியது உள்ளிட்ட பல பிரிவுகளில் தந்தை, மகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.