நடுரோட்டில் தாக்கப்பட்ட கள்ளக்காதல் ஜோடி; வீடியோ வைரல் - வேடிக்கை பார்த்த மக்கள்!
ஒரு பெண்ணையும் ஆணையும் பகிரங்கமாகத் தாக்கிய வீடியோ வைரலாகி வருகிறது.
சரமாரி தாக்குதல்
மேற்கு வங்கம், சோப்ரா பிளாக்கின் லக்கிபூர் கிராம பஞ்சாயத்து பகுதியில் பொது இடத்தில் ஒரு பெண்ணை ஒரு ஆண் மூங்கில் கம்பால் சரமாரியாக தாக்குகிறார். இதில் அந்தப் பெண் நிலைகுலைந்துவிட்டார்.
அந்த இடத்தில் இருக்கும் பொதுமக்கள், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு எந்த உதவியும் செய்யாமல் வேடிக்கை பார்க்கின்றனர். மேலும் அந்த ஆண், தரையில் விழுந்து கிடக்கும் மற்றொரு ஆணையும் தாக்குகிறார். தாக்குதல் நடத்தியவர் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சிப் பிரமுகர் தஜேமுல் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தெரிவித்துள்ளார்.
அதிர்ச்சி வீடியோ
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து, போலீசார் நடவடிக்கை எடுத்து தாஜிமுல் இஸ்லாமை கைது செய்துள்ளனர். தொடர்ந்து, மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை எதிர்க்கட்சிகள் தாக்கி, மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து விட்டதாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த தாக்குதலை தலிபான் பாணியில் விரைவாக நீதி வழங்கும் அமைப்பாக கருதப்படும் 'இன்சாப் சபா' வழங்கிய உத்தரவின் பேரில் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட நபர்கள் திருமணம் கடந்த உறவில் ஈடுபட்டதே இதற்குக் காரணம் என தெரியவந்துள்ளது. அவர்களுக்கு அபராதமும் விதித்துள்ளனர்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.