பெண்ணின் நிர்வாண வீடியோ - தேச ரகசியங்களை சிதறவிட்ட அதிகாரி!
முக்கிய ரகசியங்களை விற்றதாக பாதுகாப்பு படை வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹனி டிராப்
ஆந்திராவை சேர்ந்தவர் கபில் குமார் ஜக்தீஷ் தேவ்முராரி. மத்திய தொழிற் பாதுகாப்பு படை வீரராக உள்ளார். திருமணமாகி மனைவியை பிரிந்து வருகிறார். இந்நிலையில், முகநூல் வழியாக தமிஷா என்ற பெண் ஒருவருடன் பழகி வந்துள்ளார்.
தொடர்ந்து, வாட்ஸ் ஆப் வீடியோ காலில் அந்தப் பெண் நிர்வாணமாக பேசியுள்ளார். இதற்கு கைமாறாஆ அதிகாரி கபில் குமார் பணியாற்றும் ஸ்டீல் பிளாண்ட், முன்னதாக பணியாற்றிய பாரத் டைனமிக்ஸ் நிறுவனம்
அதிகாரி கைது
உள்ளிட்டவற்றின் ரகசிய கோப்புகளை கோரி இருக்கிறார். இதுகுறித்து ரகசிய தகவலறிந்த மத்திய தொழிற் பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டரான சரவணன் கபில் குமாரை மடக்கி பிடித்து 3 செல்போன்கள் ஆராய்ந்துள்ளார்.
அதில், கடந்த 2 வருடங்களில் பல்வேறு ரகசிய தகவல்களை தமிஷாவுக்கு தந்தது உறுதியானது. தொடர் விசாரணையில், அவர் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத குழுவின் தலைவனுக்கு உதவியாளராக இருப்பவர் எனவும் தெரிய வந்துள்ளது. அதனையடுத்து அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.