காவிரி விவகாரம்: கர்நாடக அரசால் ஒரு செங்கலை கூட வைக்க முடியாது - செல்வப்பெருந்தகை!

Tamil nadu Karnataka
By Jiyath May 04, 2024 06:14 AM GMT
Report

கர்நாடகா காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போராட தயாராக இருக்கிறோம் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். 

செல்வப்பெருந்தகை 

 தமிழக காங்கிரஸ் சார்பில் காமராஜர் அரங்கத்தின் முகப்பில் தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டது. இதனை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் "ரூ.5 லட்சம் கோடி மதிப்புள்ள போதைப் பொருள் மாயமாகி இருக்கிறது.

காவிரி விவகாரம்: கர்நாடக அரசால் ஒரு செங்கலை கூட வைக்க முடியாது - செல்வப்பெருந்தகை! | Congress Selvaperunthagai About Kaveri Issue

இதுகுறித்து, உள்துறை அமைச்கம் 4 வாரத்திற்குள் பதிலளிக்க வேண்டும் என்று டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா மற்றும் தமிழக பாஜ தலைவர்கள் யாரும் ஏன் வாய்திறக்கவில்லை.

பிரபல யூடியூபர் 'சவுக்கு சங்கர்' அதிரடி கைது - சைபர் கிரைம் போலீசார் ஆக்ஷன்!

பிரபல யூடியூபர் 'சவுக்கு சங்கர்' அதிரடி கைது - சைபர் கிரைம் போலீசார் ஆக்ஷன்!

போராட தயார் 

காவிரி விவகாரத்தில் அரசியலுக்காக கர்நாடக காங்கிரஸ் பேசி வருகிறது. தமிழகத்தின் அனுமதி இல்லாமல் மேகதாது அணை கட்டுவதற்கு ஒரு செங்கலை கூட வைக்க முடியாது. ஒழுக்காற்று குழு பாரபட்சமாக செயல்படுகிறது.

காவிரி விவகாரம்: கர்நாடக அரசால் ஒரு செங்கலை கூட வைக்க முடியாது - செல்வப்பெருந்தகை! | Congress Selvaperunthagai About Kaveri Issue

ராணுவத்தின் உதவியுடன் தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் கிடைக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கர்நாடகா காங்கிரஸ் கட்சிக்கு எதிராக நாங்கள் போராட தயாராக இருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.