திமுக ஆட்சியில் காங்கிரஸ் கட்சி தலைவருக்கே இந்த நிலைமையா? கொந்தளிக்கும் அண்ணாமலை

Indian National Congress Tamil nadu DMK BJP K. Annamalai
By Karthick May 04, 2024 09:42 AM GMT
Report

நெல்லை மாவட்ட காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் ஜெயக்குமார் மர்மமான முறையில் மரணடைந்ததுள்ளது செய்தி பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

அண்ணாமலை அறிக்கை

இது தொடர்பாக, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அப்பதிவு வருமாறு, காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின், நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவர் திரு. ஜெயக்குமார் அவர்கள் சடலமாக மீட்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது.

congress nellai leader jayakumar death

கடந்த ஏப்ரல் 30 அன்றே, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக திரு.ஜெயக்குமார் அவர்கள் புகார் அளித்திருப்பதாகத் தெரிகிறது.

காணாமல்போன காங்கிரஸ் தலைவர்; சடலமாக மீட்பு - சிக்கிய மரண வாக்குமூலம்!

காணாமல்போன காங்கிரஸ் தலைவர்; சடலமாக மீட்பு - சிக்கிய மரண வாக்குமூலம்!

கட்சி தலைவருக்கே..

குறிப்பாக, நாங்குநேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் திரு.தங்கபாலு உள்ளிட்டவர்கள் பெயர்களை, அந்தப் புகார்க் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனாலும், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

congress nellai leader jayakumar death annamalai tweet

காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவரின் புகாருக்கே, திமுக ஆட்சியில் இதுதான் நிலைமை என்றால், சாமானிய பொதுமக்கள் எதிர்கொள்ளும் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு குறித்த கேள்வி பலமாக எழுகிறது.

உடனடியாக, மறைந்த காங்கிரஸ் திருநெல்வேலி கிழக்கு மாவட்டத் தலைவர் திரு. ஜெயக்குமார் அவர்கள் புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டுமென்று திமுக அரசை வலியுறுத்துகிறேன்.