போதையில் அடம்பிடித்த ஆசாமி - பஸ்சில் இருந்து கீழே தள்ளிய கண்டக்டர்!
போதையில் இருந்த நபரை பேருந்தில் இருந்து கண்டக்டர் கீழே தள்ளிய சம்பவம் அரங்கேறியுள்ளது.
போதை ஆசாமி
பெங்களூரிலிருந்து அரசுப் பேருந்து ஒன்று நள்ளிரவில் வந்தவாசிக்கு வந்துள்ளது. அங்கு பழைய பேருந்து நிலையம் முன்பு நிறுத்தப்பட்ட பேருந்தில் இருந்து பயணிகள் இறங்கினர். இந்நிலையில், மது போதையில் இருந்த நபர் ஒருவர் இறங்காமல் இருந்தார்.
அப்போது கண்டக்டர் பிரகாஷ் அவரை சிரமப்பட்டு இறக்க முயன்றுள்ளார். ஆனால் அந்த நபர் இறங்காமல் படிக்கட்டில் நின்றுள்ளார். இதனால் கண்டக்டர் அந்த நபரைப் பிடித்து பேருந்தில் இருந்து கீழே தள்ளியுள்ளார்.
கண்டக்டர் ஆத்திரம்
இதில் அவர் சாலையில் விழுந்தார். அதன்பின் அந்தப் பேருந்து டெப்போவுக்கு புறப்பட்டுச் சென்றது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. தொடர்ந்து இந்தச் சம்பவம் குறித்து உதவி பொறியாளர் துரை கூறுகையில்,
அவலூர்பேட்டையில் ஏறிய அந்த பயணி பஸ்சிலேயே மது அருந்தியும், பஸ்சிலேயே சிறுநீர் கழித்தும் பிற பயணிகளுக்கு தொந்தரவு அளித்துள்ளார். மேலும் அந்த பயணி கீழே தள்ளப்பட்ட விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.