ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மீது காவல் நிலையத்தில் புகார்!

Tamil Cinema Chennai K. E. Gnanavel Raja
By Swetha Apr 26, 2024 11:44 AM GMT
Report

திரைப்படத் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மீது காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

ஞானவேல்ராஜா

தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ’ஸ்டுடியோ கிரீன்’ நிறுவனமும் ஒன்று.அதன் தயாரிப்பாளரான ஞானவேல்ராஜா மீது தற்போது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவரது வீட்டில் பணிபுரியம் லட்சுமி என்பவர் நேற்று தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தீயாய் பரவியது.

ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மீது காவல் நிலையத்தில் புகார்! | Complaint Register Against Producer Gnanavelraja

இந்த நிலையில், தி. நகரில் வசிக்கும் ஞானவேல்ராஜா மனைவி மேகாவின் தங்க நகைகள் காணவில்லை என்றும் அதனை லட்சுமி என்ற பணிப்பெண் மீது சந்தேகம் இருப்பதாகவும் அவரது மேலாளர் தினேஷ் காவல்நிலையத்தில் புகார் கொடுத்திருந்தார்.

நீங்கதான் அம்பானி பேமிலி ஆச்சே..! சம்பள பாக்கிய கொடுங்க - கொந்தளித்த சமுத்திரக்கனி!!

நீங்கதான் அம்பானி பேமிலி ஆச்சே..! சம்பள பாக்கிய கொடுங்க - கொந்தளித்த சமுத்திரக்கனி!!

மீது புகார்

குற்றம்சாட்டப்பட்ட பணிப்பெண் லட்சுமி தான் எந்த நகையும் எடுக்கவில்லை என்று கூறியும் அவரை கட்டாயப்படுத்தி விசாரணைக்கு அழைத்துள்ளனர். இதன் காரணமாக மன உளைச்சளுக்கு ஆளான லட்சுமி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. பின்னர் அவரை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மீது காவல் நிலையத்தில் புகார்! | Complaint Register Against Producer Gnanavelraja

இதையடுத்து, தனது தாயை தற்கொலைக்குத் தூண்டியதாக லட்சுமியின் மகள் ஞானவேல்ராஜா மற்றும் அவரது மனைவி மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், விசாரணை என்ற பெயரில் தனது தாயை சித்திரவதை செய்ததாகவும் அதனால் அவர் மன வேதனை அடைந்து தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார் என குறிப்பிட்டிருந்தது. இந்த விவகாரம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தொடர்ந்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.