ராவணன், ஹிட்லர்.. என்னை விமர்சிப்பதில் அப்படி ஒரு போட்டி - பிரதமர் மோடி
என்னை விமர்சிப்பதில் காங்கிரஸ் கட்சியினருக்கு இடையே கடும் போட்டி இருப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி
குஜராத், கலோல் என்ற இடத்தில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பிரதமர் மோடி உரையாற்றினார். அதில், “நான் மல்லிகார்ஜூன கார்கேவை மதிக்கிறேன். அவருக்கு என்ன சொல்லப்பட்டதோ அதை சொல்லக்கூடியவர் அவர்.
அதனால்தான் அவர் என்னை ராவணனோடு ஒப்பிட்டுப் பேசியுள்ளார். குஜராத் ராம பக்தர்களின் பூமி என்பது காங்கிரஸ் கட்சிக்குத் தெரியாது. ஒரு நாயின் மரணத்தைப் போன்று எனது மரணம் இருக்கும் என்று ஒரு காங்கிரஸ் தலைவர் கூறினார்.
விமர்சனம்
வேறொரு காங்கிரஸ் தலைவர் பேசும்போது, ஹிட்லருக்கு நேர்ந்த மரணத்தைப் போன்று எனக்கு மரணம் ஏற்படும் என சாபமிட்டார். எனக்கு வாய்ப்பு கிடைத்தால் மோடியை நானே கொலை செய்வேன் என ஒரு காங்கிரஸ் தலைவர் கூறினார்.
சிலர் என்னை ராவணன் என்கிறார்கள்; ராட்சசன் என்கிறார்கள். சிலர் என்னை கரப்பான்பூச்சி என்றும் குறிப்பிடுகிறார்கள். என்னை யார் கடுமையாக விமர்சிக்கிறார்கள் என்பதில் காங்கிரஸ் கட்சியினரிடையே மிகப் பெரிய போட்டியே நடைபெற்றுக்கொண்டிருக்கிறது” என தெரிவித்தார்.