வடக்கர்கள் நமக்கு பால் ஊற்ற போகிறார்கள் - மதுரை முத்து வேதனை!

Tamil Cinema Tamil nadu Viral Video
By Sumathi Jan 28, 2023 08:12 AM GMT
Report

 வட இந்தியர்கள் தமிழர் ஒருவரை தாக்கிய வீடியோவை பார்த்து, கொந்தளித்து மதுரை முத்து பேசியுள்ளார்.

மதுரை முத்து

திருப்பூரில் வட இந்திய இளைஞர்கள் தமிழ்நாட்டு இளைஞர்களை பெல்ட், உருட்டு கட்டை, கத்தி போன்ற ஆயுதங்களால் கொண்டு தாக்கும் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலானது. இதுகுறித்து பேசிய மதுரைமுத்து, "திருப்பூரில் வடமாநில இளைஞர்கள் கொண்டு நமது தமிழ் இளைஞர்களைத் தாக்கும் விடியோவைப் பார்த்தேன்.

வடக்கர்கள் நமக்கு பால் ஊற்ற போகிறார்கள் - மதுரை முத்து வேதனை! | Comedy Actor Madurai Muthu Warning Tamil People

லேசாக வேலை கேட்டு வந்தவர்கள் முதலில் 10 சதவீதம் இருந்தார்கள். இன்று திருப்பூரில் 65 சதவீதம் வடமாநிலத்தவர்கள் உள்ளனர். தமிழகத்திற்கு வேலைக்காக வந்தவர்கள் நம் தமிழக இளைஞர்களையே அடிக்க துணிந்து விட்டனர்.

வைரல் வீடியோ

வடமாநிலத்தவர் நம்மை விரட்டி அடிக்கும் அளவிற்கு தமிழ் இளைஞர்கள் விழிப்புடன் இருக்கிறீர்கள். பாலாபிஷேகம் செய்யும் நமக்கு, இன்னும் கொஞ்ச நாளில் வடமாநிலத்தவர் பால் ஊற்ற போகிறான். நம்ம பிச்சைதான் எடுக்கனும்.

நம் ஊரில் செட்டியார் தெரு, கவுண்டர் தெரு, தேவர் தெரு இருப்பது போல் வடக்கன் தெரு என வரும். அவர்கள் ரேசன் கார்டு வாங்கிவிட்டார்கள். வட இந்தியர்கள் தமிழ் இளைஞர்களை விரட்டி அடிக்கும் காட்சியை பார்க்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது.

வட இந்தியாவில் இந்தி தெரியாமல் நம்மால் 2 நாட்கள் தங்க முடியவில்லை. அவர்கள் இங்கு வந்து நம்மை விரட்டி அடிக்கும் அளவிற்கு நாம் அவ்வளவு அசால்டாக இருக்கிறோம். தமிழ் இளைஞர்கள் மிகவும் விழிப்புணர்வோடும் கவனத்தோடும் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.