சாலையில் சென்ற சிறுமி.. இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த நபர்!
சாலையில் சென்ற சிறுமியை, நபர் ஒருவர் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
பாலியல் வன்கொடுமை
வேலூர், ஒடுகத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சரத்குமார்(25). இவர் அணைக்கட்டு பகுதியில் பேக்கரி கடையில் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். திருமணமாகி கடந்த வாரம்தான் பெண் குழந்தை பிறந்துள்ளது.
இந்நிலையில், குடியாத்தம் அரசு கல்லூரியில் படித்து வருகிறார் 17 வயது சிறுமி. இவர் விடுமுறை நாட்களில் அப்பகுதியில் தனியார் துணிக்கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். அப்போது வேலை செய்துவிட்டு பேருந்தில் இறங்கி தந்தையுடன் செல்வது வழக்கம்.
கதறிய சிறுமி
சம்பவத்தன்று தந்தை வர தாமதமானதால் அந்த சிறுமி நடக்க ஆரம்பித்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த சரத்குமார் தன்னுடன் பைக்கில் ஏறுமாறு இடைமறித்துள்ளார். அதற்கு சிறுமி மறுத்துள்ளார். உடனே அவர் சிறுமியை கட்டாயப்படுத்து கைய் பிடித்து இழுத்துள்ளார்.
இதனை அவ்வழியாக சென்ற இருவர் கேட்ட நிலையில் அவர்களை மிரட்டி அனுப்பியுள்ளார். தொடர்ந்து அந்தச் சிறுமியை அருகில் உள்ள வாழைத்தோப்புக்குள் இழுத்துச் சென்றுள்ளார். அந்தச் சிறுமி மறுத்து கத்தியுள்ளார் உடனே அவரது வாயில் துணியை வைத்து அடித்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
போக்சோவில் கைது
மேலும், இதனை யாரிடமும் சொல்லக்கூடாது எனவும் மிரட்டியுள்ளார். அதனையடுத்து அழுதுக்கொண்டே வீடு வந்த சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல்நிலையத்தில் புகாரளித்துள்ளனர்.
அதன் அடிப்படையில், போலீஸார் சரத்குமார் மீது வழக்குப்பதிவு செய்து போக்சோவின் கீழ் கைது செய்துள்ளனர்.