வேறு பெண்ணுடன் நெருக்கமாக பேசிய காதலன் - ஆத்திரத்தில் காதலி செய்த கொடூரம்!

Crime Death Mayiladuthurai
By Swetha May 15, 2024 09:00 AM GMT
Report

மயிலாடுதுறையில் காதலனை காதலியே பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

காதலன் 

மயிலாடுதுறை தெற்கு தெருவில் வசிப்பவர் ஆகாஷ்(24). இவர், பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். கடலூர் மாவட்டம் புவனகிரியை சேர்ந்த சிந்துஜா(22) பி.ஏ. இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டு நாளடைவில் இதுவே காதலாக மலர்ந்தது.

வேறு பெண்ணுடன் நெருக்கமாக பேசிய காதலன் - ஆத்திரத்தில் காதலி செய்த கொடூரம்! | College Student Dies Trying To Save His Girlfriend

இந்த காதல் ஜோடி மிகவும் தீவிரமாக காதலித்து வந்துள்ளனர். இதற்கிடையில் ஆகாஷ் வேறு ஒரு பெண்ணுடன் பழகியதால் சிந்துஜாவிடம் பேசுவது மற்றும் சந்திப்பதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் மிகுந்த மனவேதனை அடைந்த அவர் தனது காதலனை நேரில் சந்திக்க முடிவு செய்தார்.

பாலியல் சில்மிஷம்... கன்னத்தில் அறைந்த மாணவி - தீ வைத்து எரித்த கொடூரம்!

பாலியல் சில்மிஷம்... கன்னத்தில் அறைந்த மாணவி - தீ வைத்து எரித்த கொடூரம்!

காதலி 

பின்னர் மோட்டார் சைக்கிளில் இருவரும் மயிலாடுதுறை வந்தனர்.அப்போது சிந்துஜா தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை தனது உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டார். அதைப்பார்த்து பதறிய ஆகாஷ் காதலியை காப்பாற்ற முயன்றார் ஆனால் அந்த தீ இருவர் மீதும் பற்றி எரிந்தது.

வேறு பெண்ணுடன் நெருக்கமாக பேசிய காதலன் - ஆத்திரத்தில் காதலி செய்த கொடூரம்! | College Student Dies Trying To Save His Girlfriend

பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய இருவரையும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு இருவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி ஆகாஷ் உயிரிழந்தார்.

சிந்துஜாவிற்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆகாஷ் கொடுத்த மரண வாக்குமூலத்தில் உள்ள தகவலின்படி போலீசார், சிந்துஜா மீது கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.