மாணவனுக்கு கல்லூரி டீன் பாலியல் வன்கொடுமை - திடுக்கிடும் ஓரினச்சேர்க்கை சம்பவம்
கல்லூரி டீன் மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாலியல் தொல்லை
கோவையில் பிரபல தனியார் கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியின் டீன் மற்றும் உயிர்வேதியல் துறை தலைவராக இருந்து வருபவர் மதன்சங்கர். இவரிடம் முனைவர் பட்ட படிப்பு மேற்கொள்ளும் மாணவர் ஒருவர் மதன்சங்கர் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதாக
பாரதியார் பல்கலை கழகம் மற்றும் கல்லூரி நிர்வாகம் ஆகியவற்றில் புகார் அளித்துள்ளார். விசாரணையில், மாணவரை இந்தோனேசியா, சென்னை உட்பட பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று கல்லூரி டீன் மதன்சங்கர் பாலியல் தொந்தரவு செய்து இருப்பது தெரியவந்தது.
மானவர் புகார்
இதற்கிடையில், பாதிக்கப்பட்ட மாணவரிடம், கல்லூரி டீன் சமரசம் பேசும் ஆடியோவும் வெளியாகியது. இதைத் தொடர்ந்து, அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து மாணவர், கடந்த ஓன்றரை ஆண்டு காலமாக பேராசிரியர் பாலியல் ரீதியாக அத்துமீறினார் எனவும் மதரீதியாகவும், ஜாதி ரீதியாகவும் பேசும் வழக்கம் கொண்டவர்.
சொல்லும் படியாக கேட்காமல் இருந்தால் கையெழுத்து போட மாட்டார். அவர் ஆசிரியர் பணியில் இருக்க கூடாது, பிற மாணவர்கள் பாதிக்கப்பட கூடாது, ஏற்கனவே இவரால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர் என குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் கல்லூரி நிர்வாகம், முதல் கட்ட விசாரணை நடைபெற்று முடிந்து இருப்பதாகவும், அடுத்தகட்ட விசாரணைக்கு பின்பு சட்டரீதியான நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் என தெரிவித்துள்ளது.

உச்ச கட்ட பதற்றம் : சற்று முன்னர் ஈரானின் அரசு தொலைக்காட்சி ஒளிபரப்பு தலைமையகத்தை குண்டுவீசி தகர்த்தது இஸ்ரேல் IBC Tamil

IQ Test: குழந்தையை கடத்த முயற்சிக்கும் நபர்.. 5 வினாடிகளில் காப்பற்றவும் - ஆபத்தில் இருப்பவர் யார்? Manithan
