பெற்ற தந்தையே பாலியல் தொல்லை - மகளை பூட்டி வைத்த தாய்!

Sexual harassment Child Abuse Crime Mumbai
By Sumathi Jan 21, 2023 08:51 AM GMT
Report

தந்தையே பாலியல் தொல்லை அளித்து வந்ததால், மகளை தாய் வீட்டில் பூட்டி வைத்துள்ளார்.

பாலியல் தொல்லை

மும்பை, மதராசாவில் சமையல் வேலை பார்த்து வருகிறார் அந்த பெண். அப்பெண்ணின் கணவர் தனது 17 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த பெண், கணவனிடம் இருந்து

பெற்ற தந்தையே பாலியல் தொல்லை - மகளை பூட்டி வைத்த தாய்! | Husband Sexual Harassment Mother Locked Daughter

மகளை பாதுகாக்க வேலைக்குச் செல்லும் போது மகளை வீட்டுக்குள் வைத்து பூட்டிவிட்டு சென்றிருக்கிறார். ஆனால் சாவியை பக்கத்து வீட்டு டெய்லரிடம் கொடுத்துச் சென்றிருக்கிறார்.

அடுத்த அதிர்ச்சி

இதனைப் பயன்படுத்தி டெய்லர் வீட்டை திறந்து அந்த சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளார். மேலும், செல்போனில் வீடியோவாக எடுத்து மிரட்டியுள்ளார்.

இதை பார்த்துவிட்ட பக்கத்து வீட்டு பெண் டெய்லரை கண்டித்து இருக்கிறார் . அப்போது சிறுமி தனக்கு நேர்ந்த கொடுமைகளை சொல்லி வீடியோ ஆதாரத்தை காட்டி இருக்கிறார்.

இதைக்கெட்டு அதிர்ந்த தாய் போலீஸில் புகாரளித்துள்ளார். அதன் அடிப்படையில் டெய்லர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளார்