பிரபல தனியார் ஹோட்டல் உணவில் கரப்பான்பூச்சி - அலட்சியத்தில் நிர்வாகம்!

Coimbatore
By Sumathi Nov 28, 2023 09:52 AM GMT
Report

தனியார் உணவகத்தின் உணவில் கரப்பான்பூச்சி கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஏ2பி உணவகம்

கோவை, காந்திபுரம் பகுதியில் டைகர் என்டர்பிரைஸ் என்ற டெலி காலர் நிறுவனத்தை, மணிகண்டன் என்பவர் நடத்தி வருகிறார். கார்த்திகை தீபத்தை முன்னிட்டு அடையாறு ஆனந்த பவன் (ஏ2பி) உணவகத்தில் நிறுவன சார்பில் சைவ உணவு வாங்கப்பட்டுள்ளது.

cockroaches-in a2b hotel food

அங்கு பணிபுரியும் பெண்களுக்காக 9 சாப்பாடு என 2,157 ரூபாய்க்கு ஆர்டர் செய்யப்பட்டுள்ளது. உணவு வந்ததும், ஊழியர்கள் சாப்பிடுவதற்காக திறந்து பார்த்தபோது, கீரையில் கரப்பான் பூச்சி இருந்துள்ளது.

மசால் தோசையில் கிடந்த கரப்பான் பூச்சி; ஆத்திரமடைந்த கஸ்டமர் - முழித்த ஊழியர்கள்!

மசால் தோசையில் கிடந்த கரப்பான் பூச்சி; ஆத்திரமடைந்த கஸ்டமர் - முழித்த ஊழியர்கள்!

உணவில் கரப்பான்பூச்சி

இதனால் அதிர்ச்சியடைந்தவர்கள் ஏ2பி உணவகத்திற்கு சென்று இதுகுறித்து கேட்டுள்ளனர். அதற்கு, அங்கு இனிமேல் இப்படி சம்பவம் நடக்காது என்று ஊழியர்கள் அலட்சியமாக பதிலளித்துள்ளனர்.

coimbatore

அதன்பின், உணவு பாதுகாப்புத்துறைக்கு புகாரளித்துள்ளார். தொடர்ந்து, இதுகுறித்த விசாரணை நடைபெற்று கொண்டிருக்கிறது. உணவை சாப்பிட்ட பெண்கள் வாந்தி எடுத்தது குறிப்பிடத்தக்கது.