மசால் தோசையில் கிடந்த கரப்பான் பூச்சி; ஆத்திரமடைந்த கஸ்டமர் - முழித்த ஊழியர்கள்!

Coimbatore
By Sumathi May 02, 2023 09:27 AM GMT
Report

 உணவில் கரப்பான்பூச்சி இருந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி அடைந்தார்.

தோசையில் கரப்பான் பூச்சி

கோவை சாய்பாபா காலனி என்.எல்.ஆர் சாலையில் பிரபல தனியார் உணவகம் இயங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர். அதன் வரிசையில், வாடிக்கையாளர் ஒருவர் குடும்பத்துடன் உணவருந்த வந்துள்ளார்.

மசால் தோசையில் கிடந்த கரப்பான் பூச்சி; ஆத்திரமடைந்த கஸ்டமர் - முழித்த ஊழியர்கள்! | Cockroach In Famous Restaurants Dosa In Coimbatore

அப்போது மசால் தோசை ஆர்டர் செய்துள்ளார். வாங்கிய மசால் தோசையில் கரப்பான் பூச்சி இருந்ததை கண்டதும் வாடிக்கையாளர் அதிர்ச்சியடைந்துள்ளார். தொடர்ந்து ஆத்திரமடைந்தவர், பணியில் இருந்த ஊழியர்களிடம் முறையிட்டார்.

கஸ்டமர் ஷாக்

ஆனால், அவர்களிடம் இருந்து உரிய பதில் கிடைக்கவில்லை. அதனையடுத்து, மையலறை முழுவதையும் தூய்மை படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், உணவு பாதுகாப்பு துறையினரிடம் புகார் அளிக்க உள்ளதாக கூறி அங்கிருந்து புறப்பட்டுள்ளார். தற்போது, இது தொடர்பாக ஊழியர்களிடம் வாடிக்கையாளர் கேட்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.