இந்தியா வெற்றியைப் பார்த்து வாயடைத்து ஆஸ்திரேலியா அணியின் பயிற்சியாளர் வெளியிட்ட தகவல்

test australia win
By Jon Jan 19, 2021 06:17 PM GMT
Report

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டியில் இந்தியா அணி வெற்றிப்பெற்று தொடரைக் கைப்பற்றி வரலாற்று சாதனைப் படைத்துள்ளது. ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான 4-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நடைபெற்றது.

ஷுப்மான் கில் (91), ரிஷப் பண்ட் (89 அவுட் இல்லை) ஆகியோரின் சிறப்பான பேட்டிங்கால் இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 329 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் உலக டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் இந்திய அணி2-வது இடத்திற்கு முன்னேறியது.

அதே நேரத்தில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதன் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஆஸ்திரேலியா அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறியதாவது,"இந்தியா அணியை இதற்கு பிறகு எளிதான அணியாக கருக்குடாது என்பதை புரிந்து கொண்டோம்.

ஏனெனில் இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 1.5 பில்லியன் கோடி மக்கள் உள்ளனர். அதிலிருந்து 11 பேர் கொண்ட அணியில் வீரர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள் என்றால் அந்த அணி எப்படிப்பட்ட பலம் வாய்ந்த அணியாக இருக்கும் என்பதை உணர்ந்துளோம் " என அவர் தெரிவித்தார்.