‘அம்மா உணவகங்களில் இலவச உணவு’ - முதலமைச்சர் அறிவிப்பு

M K Stalin Tamil nadu TN Weather
By Sumathi Oct 16, 2024 05:43 AM GMT
Report

அம்மா உணவகங்களில் இலவசமாக உணவு வழங்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இலவச உணவு

கடந்த 6 மணி நேரத்தில் சென்னையின் பல பகுதிகளில் 150 மிமீ மழை பெய்துள்ளது. முக்கியமாக வட சென்னை மற்றும் மத்திய சென்னை பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.

amma canteen

மேலும், பள்ளிக்கரணை, கண்ணகி நகர், துரைப்பாக்கம், வேளச்சேரி, மடிப்பாக்கம், ராம்நகர், பெருங்குடி, பெரும்பாக்கம், முடிச்சூர் உள்ளிட்ட இடங்களில் குடியிருப்பு பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் தவிப்புக்கு ஆளாகினர். அங்கு வசித்த மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து முதலமைச்சர் ஸ்டாலின் யானைக்கவுனி, பட்டாளம், பெரம்பூர் , புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிலையில், சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

அம்மா உணவக சர்ச்சை - பூரி, வடை, சப்பாத்தி, ஆம்லெட் விற்பனை செய்து லாபம் ஈட்டியது அம்பலம்!

அம்மா உணவக சர்ச்சை - பூரி, வடை, சப்பாத்தி, ஆம்லெட் விற்பனை செய்து லாபம் ஈட்டியது அம்பலம்!

முதல்வர் அறிவிப்பு

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “நேற்று அதிக அளவில் பெய்த வடகிழக்குப் பருவமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், அனைத்து நிவாரணப் பணிகளும் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தாழ்வான பகுதிகளில் வாழும் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் இதர உதவிகள் பெருநகர சென்னை மாநகராட்சியால் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சென்னை மாநகரத்தின் மற்ற பகுதிகளில் வாழக்கூடிய ஏழை - எளிய மக்கள் உணவு அருந்தக்கூடிய அம்மா உணவகங்களிலும், இன்றும் நாளையும் இலவசமாக உணவு வழங்கப்படும்.” எனக் குறிப்பிட்டுள்ளார்.