4 ரூபாய்க்கு ட்ரஸ் எடுக்க சென்று பர்ஸ்ஸ பறிகொடுத்த சம்பவம்!

Tamil nadu
By Sumathi Sep 28, 2022 10:17 AM GMT
Report

பிரபல ஜவுளி கடையின் துவக்க விழாவை முன்னிட்டு 4 ரூபாய்க்கு ஆடைகள் விற்கப்பட்டது.

தொடக்க விழா 

திருவாரூர், ருக்குமணிபாளையம் சாலையில் பிரபல ஜவுளி கடை ஒன்று உள்ளது. இந்த கடையின் நான்காம் ஆண்டு தொடக்க விழா கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு வாடிக்கையாளர்களை கவரும் வகையில்

4 ரூபாய்க்கு ட்ரஸ் எடுக்க சென்று பர்ஸ்ஸ பறிகொடுத்த சம்பவம்! | Clothes Sale For Only 4 Rupees Thiruvarur

முதலில் வரும் 400 நபர்களுக்கு எந்த ஆடை எடுத்தாலும் 4 ரூபாய்க்கு குறிப்பிட்ட ஆடைகள் விற்பனை செய்யப்படும் என கடையின் முன்பு பிளக்ஸ் பேனர் வைக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த பொதுமக்கள் கடையின் முன்பு காலை 7 மணி முதலே வரதொடங்கினார்கள்.

 4 ரூபாய்க்கு ஆடைகள்

இதனால் கடை அமைந்துள்ள ருக்மணிபாளையம் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடையிலும் ஏராளமானோர் கூடியதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. கடையில் மலைபோல் குவிக்கப்பட்ட ஆடைகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி சென்றனர்.

4 ரூபாய்க்கு ட்ரஸ் எடுக்க சென்று பர்ஸ்ஸ பறிகொடுத்த சம்பவம்! | Clothes Sale For Only 4 Rupees Thiruvarur

4 ரூபாய்க்கு ஆடை வாங்க வந்தவர்களில் சிலர் தங்களின் விலை உயர்ந்த கைபேசி, ரொக்க பணம், கைபை உள்ளிட்டவற்றை தவறவிட்டு கண்ணீருடன் சென்ற நிலையும் ஏற்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில், பரபரப்பை ஏற்படுத்தியது.