2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் மூடல் - கலெக்டர் உத்தரவு!
2 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகள் இயங்காது என ஆட்சியர் அறிவித்துள்ளார்.
காந்தி ஜெயந்தி
சென்னை மாவட்ட கலெக்டர் ராஷ்மி சித்தார்த் ஜகடே செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நபிகள் நாயகத்தின் பிறந்தநாளான மிலாடி நபியை முன்னிட்டு நாளை மறுநாள் (வியாழக்கிழமை),
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு வருகிற 2-ஆம் தேதி (திங்கள்கிழமை) ஆகிய 2 நாட்கள் தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003-ன் படி
டாஸ்மாக் மூடல்
சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதைச்சார்ந்த பார்கள், எப்.எல்.-2 உரிமம் கொண்ட கிளப்புகளை சார்ந்த பார்கள், எப்.எல்.-3 உரிமம் கொண்ட ஓட்டல்களை சார்ந்த பார்கள் மற்றும்
எப்.எல்.-3 (ஏ), எப்.எல்.3 (ஏ.ஏ.) மற்றும் எப்.எல்.11 உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு மதுபானம் விற்பனை செய்யக்கூடாது.
மீறினால், மதுபானம் மற்றும் விற்பனை விதிகளின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவில் தேனிலவிற்கு சென்றவேளை கொடூரம் : கூலிப்படையை வைத்து கணவனை தீர்த்து கட்டிய மனைவி IBC Tamil

Siragadikka Aasai: முத்துவிடம் கதறி அழும் பெண்... சீதாவின் காதலுக்கு பச்சைக்கொடி காட்டுவாரா? Manithan

அவர்களின் நாகரீகம் இதுதானா? மரியாதைக்கு கூட என்னிடம் கேட்பதில்லை; கவிஞர் வைரமுத்துவின் வைரல் பதிவு! Manithan
