நாட்டை மிரட்டும் பருவநிலை; இத்தனை பேரிடர்களா? 5,000 பேர் பலி!
ஆசிய நாடுகளில் கடந்த ஆண்டில் மட்டும் 80 பேரிடர்கள் ஏற்பட்டுள்ளன.
பருவநிலை
உலக வானிலை அமைப்பான world meteorological organization ஆசியாவில் ஏற்பட்டுள்ள பேரிடர்கள், அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் உள்ளிட்டவை தொடர்பான ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், வானிலை, பருவநிலை மற்றும் தண்ணீர் தொடர்பாக மொத்தம் 81 பேரிடர்கள் கடந்த ஆண்டில் மட்டும் ஏற்பட்டுள்ளன. இவற்றில் 83 சதவீதம் வெள்ளம் மற்றும் புயலால் ஏற்பட்டவை.
5,000 பேர் பலி
இதனால் 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். 5 கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2022 இல் அதிக வெப்பம் மற்றும் வறட்சியான சூழலால் ஆசியாவில் உள்ள பனிப்பாறைகள் முன்பை விட அதிக வேகமாக உருகியுள்ளன.
இது அடுத்து வரும் ஆண்டுகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம் எனக் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஏற்பட்ட பேரிடர் தொடர்பான எச்சரிக்கை ஆசிய நாடுகளுக்கு மட்டுமின்றி உலக நாடுகள் அனைத்திற்குமான அலெர்ட் என்று ஐ.நா எச்சரித்துள்ளது.