Mcdonald: குழந்தைகளுக்காக ஆர்டர் செய்த உணவில் சிகரெட் - ஷாக் புகைப்படம்!
குழந்தைக்கு வாங்கிய உணவில் சிகரெட் துண்டு இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரெஞ்ச் ஃபிரைஸ்
பிரிட்டனைச் சேர்ந்தவர் ஜெம்மா கிர்க் போன்னர். இந்தப் பெண் பேரோ-இன்-ஃபர்னஸ் என்ற இடத்தில் உள்ள மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் தன்னுடைய மகன் ஜேக்சனுக்காக உணவு வாங்கியுள்ளார்.
ஹேப்பி மீல்ஸ் என்ற சாப்பாடும், பிரெஞ்ச் ஃபிரைஸும் வாங்கிச் சென்றுள்ளார். அப்போது, பிரெஞ்ச் ஃபிரைஸ் பார்சலை திறந்து பார்த்ததில் அதிர்ச்சியடைந்துள்ளார். அதில் சிகரெட் துண்டு கிடந்துள்ளது.
சிகரெட் துண்டு
இதனையடுத்து,அதனை ஃபோட்டோ எடுத்து ஃபேஸ்புக் தளத்தில் வெளியிட்ட அந்தப் பெண், “குழந்தைகளை மகிழ்விக்க மொறுமொறுவென்ற ஃபிரைஸ் வேண்டும் என்பதை மறந்து விடுங்கள். இப்போதெல்லாம் குழந்தைகளுக்கான உணவில் சுவையை அதிகரிப்பதற்காக சிகரெட் துண்டு மற்றும் சாம்பல் ஆகியவை சேர்க்கப்படுகிறது.
இதுகுறித்து புகார் அளிப்பதற்காக மெக்டொனால்ட்ஸ் உணவகத்திற்கு நான் போன் செய்தேன். ஆனால், மிகவும் திமிராகப் பேசிய பெண் பணியாளர் ஒருவர், என் கேள்விகளுக்கு பதில் அளிக்காமலே ஃபோனை துண்டித்து விட்டார்’’ எனக் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற பல்வேறு சம்பவங்கள் மெக்டொனால்ட்ஸ் உணவகம் மீது சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.