நடிகை சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்..தந்தை மேல்முறையீடு - சிக்கலில் ஹேம்நாத்!

Tamil nadu V. J. Chitra
By Swetha Sep 28, 2024 03:16 AM GMT
Report

சித்ரா மரண வழக்கில் ஹேம்நாத் விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு போடப்பட்டுள்ளது.

சித்ரா மரண வழக்கு

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த 2020ம் ஆண்டு ஹோட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சித்ராவின் மரணத்திற்கு அவரது கணவர் ஹேம்நாத் தான் காரணம் என்று பலரும் குற்றம் சாட்டி இருந்தனர்.

நடிகை சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்..தந்தை மேல்முறையீடு - சிக்கலில் ஹேம்நாத்! | Chitra S Death Case Father Files Appeal

இது தொடர்பாக சித்ராவின் குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில், கணவர் ஹேம்நாத் உள்ளிட்ட 7-பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த, திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் அண்மையில் ஹேம்நாத்தை விடுதலை செய்து உத்தரவிட்டிருந்தது.

நடிகை சித்ரா கஞ்சா அடிக்கிறா,குடிக்கிறானு சொல்றாங்க - அவன் நல்லவனா?  குமுறும்  தாய்..!

நடிகை சித்ரா கஞ்சா அடிக்கிறா,குடிக்கிறானு சொல்றாங்க - அவன் நல்லவனா? குமுறும் தாய்..!

சிக்கலில் ஹேம்நாத்

இந்த நிலையில், ஹேம்நாத் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து சித்ராவின் தந்தை காமராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத்தாக்கல் செய்துள்ளார்.

நடிகை சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்..தந்தை மேல்முறையீடு - சிக்கலில் ஹேம்நாத்! | Chitra S Death Case Father Files Appeal

மனுவில், அரசு தரப்பு சாட்சிகளின் வாக்குமூலங்களை முறையாக கவனத்தில் கொள்ளாமல் மகளிர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.