நடிகை சித்ரா மரணம்...கணவர் ஹேம்நாத் மிரட்டவில்லையாம் - வெளியான பகீர் தகவல்

Only Kollywood Chennai V. J. Chitra
By Sumathi Sep 24, 2022 07:15 AM GMT
Report

சித்ரா வழக்கில், ஹேம்நாத் தனது நண்பரை மிரட்டியதாக கூறப்பட்ட வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சித்ரா தற்கொலை

சின்னத்திரை நடிகை சித்ரா, கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் தேதி தற்கொலை செய்து கொண்டார். நடிகை சித்ராவை தற்கொலைக்கு தூண்டிய புகாரில் ஹேம்நாத்தை காவல்துறை கைது செய்தனர்.

நடிகை சித்ரா மரணம்...கணவர் ஹேம்நாத் மிரட்டவில்லையாம் - வெளியான பகீர் தகவல் | Chitra Case Hemnath Did Not Threaten Friend Syed

பின்னர் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில், ஹேம்நாத்தின் ஜாமீனை ரத்து செய்யக்கோரி அவரது நண்பர் சையத் ரோஹித் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

நண்பர் சையத் மனு 

அதில் ஹேம்நாத் தனது நீண்டகால நண்பர் எனவும் அவர் மூலம் சித்ராவை தமக்கு நன்றாக தெரியும் எனவும் சித்ராவிற்கு ஹேம்நாத் அளித்த தொல்லைகள் குறித்து காவல்துறை விசாரணையின் போது சாட்சியம் அளித்ததாக குறிப்பிட்டிருந்தார்.

இதற்காக ஹேம்நாத் தம்மை கொலை செய்து விடுவதாக மிரட்டுவதாகவும் சையத் ரோஹித் தனது மனுவில் தெரிவித்துள்ளார். இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.

உண்மை இல்லை 

அப்போது, ஹேம்நாத் தனது நண்பர் சையத் ரோஹித்தை மிரட்டியாதாக கொடுக்கப்பட்ட புகாரை விசாரித்தில் அது உண்மை இல்லை என தெரிய வந்ததால், புகார் முடித்து வைக்கப்பட்டதாக காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

அதேபோல், சையத் ரோகித்தை மிரட்ட மாட்டேன் என ஹேம்நாத் தரப்பிலும் உத்தரவாதம் அளிக்கப்பட்டது.