வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றீர்களா? - கேள்வி கேட்ட நெட்டிசன்.... பதறிய சின்மயி போட்ட டுவிட்
பிரபல பாடகி சின்மயி
பிரபல பின்னணி பாடகி சின்மயி, ஏ. ஆர். ரகுமான் இசையில் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்தில் இடம்பெற்ற ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ என்ற பாடல் மூலம் பட்டித்தொட்டியெங்கும் பிரபலமானார். பல படங்களில் இவர் கதாநாயகிகளுக்கு பின்னணி குரல் கொடுத்திருக்கிறார்.
திருமணம்
சின்மயி கடந்த 2014ம் ஆண்டு நடிகர் ராகுல் ரவீந்திரன் என்பவரை திருமணம் செய்தார்.
சர்ச்சை
கடந்த சில ஆண்டுகளாகவே சின்மயியை சுற்றி சர்ச்சையான கருத்துக்களும், விமர்சனங்களும் வலம் வர தொடங்கியது. கவிஞர் வைரமுத்து மீது அவர் கொடுத்த மீடூ புகார் ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சியடைய செய்தது. அன்றிலிருந்து இன்றுவரை சின்மயி தொடர்ந்து அதுகுறித்து சமூகவலைதளங்களில் பேசி வருகிறார்.
இரட்டைக் குழந்தை
தற்போது, பாடகி சின்மயி - ராகுல் ரவீந்திரன் தம்பதிக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ளது. இதை தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதி செய்துள்ள தம்பதி, டிரிப்தா மற்றும் ஷர்வாஸ் என குழந்தைகளின் பெயரை குறிப்பிட்டுள்ளனர். தற்போது இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இவரது ரசிகர்கள் சின்மயிக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்தாரா?
என்னதான் சமூக வலைதளங்களில் சின்மயிக்கு வாழ்த்துக்கள் குவிந்தாலும், சிலர் சின்மயி கர்ப்பமாக இருந்தபோது எடுத்த புகைப்படம் ஒன்றைக் கூட இதுவரை வெளியிடவில்லையே, ஒருவேளை சின்மயி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றெடுத்தாரா என்ற கேள்விகளை சமூகவலைத்தளங்களில் எழுப்பி வருகின்றனர்.
சின்மயி விளக்கம்
இந்த கேள்விக்கு தற்போது சின்மயி விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், “நான் கர்ப்பமாக இருக்கும்போது புகைப்படங்களை வெளியிடாததால், நிறைய பேர் வாடகைத் தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்தீர்களா என கேட்கிறார்கள், அவர்களை நான் முற்றிலும் நேசிக்கிறேன்.
பர்சனல் விஷயம் என்பதால் நான் பாதுகாத்து வந்தேன், எனது நெருங்கிய வட்டத்துக்கு மட்டும் தெரியும். எனது குழந்தைகளின் புகைப்படங்களை நீண்ட காலத்துக்கு சமூக வலைதளங்களில் வெளியிட மாட்டேன். ஆபரேஷன் மூலம் தான் இரட்டை குழந்தைகள் பிறந்தது. அந்த சமயத்தில் நான் பஜனை பாடிக் கொண்டிருந்தேன்” என்று பதிவிட்டுள்ளார்.