இளைஞருக்கு 20 ஆண்டுகளாக மாதவிடாய்..வலியால் தவித்த அதிர்ச்சி சம்பவம்!

Pregnancy China
By Sumathi Jul 11, 2022 06:54 AM GMT
Report

கடந்த 20 ஆண்டுகளாக சீன இளைஞருக்கு மாதவிடாய் சுழற்சி ஏற்பட்டு வந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுநீரக பிரச்சினை

சீனாவின் சின்சுவா மாகாணத்தை சேர்ந்த இவர் கடந்த 20 ஆண்டுகளாக சிறுநீரக பிரச்சினையால் பாதிக்கப்பட்டு வந்ததாக கருதினார். சிறுநீர் கழிக்கும் போதெல்லாம் ரத்த போக்கு ஏற்பட்டுள்ளது.

china

இதனால் அவர் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார். இவருக்கு இந்த பிரச்சினை அனைத்து நாட்களிலும் இருக்காது. ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் மீண்டும் 20 ஆண்டுகளாக நிகழ்ந்துள்ளது.

அடிவயிற்றில் வலி

மேலும் அடிவயிற்றில் வலியும் இருந்து வந்துள்ளது. சாதாரண குடும்பத்தில் பிறந்த இவர் பணத்தை செலவு செய்ய முடியாததால் உடல்நிலை குறித்து பெரிதும் கவலைக்கொள்ளாமல் இருக்கும் வரை இருந்து கொள்ளலாம் என்ற முடிவில் இருந்துள்ளார்.

இளைஞருக்கு 20 ஆண்டுகளாக மாதவிடாய்..வலியால் தவித்த அதிர்ச்சி சம்பவம்! | Chinese Suffering Uterus Female Glands Menopause

பின்னர் அவருக்கு தொடர்ந்து மாதவிடாயும் அடிவயிற்றில் வலியும் இருந்துள்ளது. இதையடுத்து இவர் ஒரு யூரோலாஜிஸ்டை சந்தித்து ஆலோசனை பெற்றார்.

 ரத்தப் போக்கு

அவருக்கு மாதத்தில் பாதி நாட்கள் எந்த பிரச்சினையும் இல்லாமல் குறிப்பிட்ட சில நாட்களில் மட்டும் ரத்தப் போக்கால் பாதிப்படைவது மருத்துவருக்கும் புரியவில்லை.

ஆயினும் எந்த சிகிச்சையும் பெறாமல் ரத்த போக்கு தானாகவே நின்றுவிட்டது. இது வினோதமாக இருந்தது. பின்னர் அவருக்கு ஹார்மோன் பரிசோதனை செய்யப்பட்டது.

பிறப்புறுப்பு

ஆண்களுக்கான டெஸ்டோஸ்ட்ரோன் இருக்க வேண்டிய இயல்பான அளவிலும் பெண்களுக்கு இருக்க கூடிய ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனும் இருக்க வேண்டிய அளவுக்கு இருந்துள்ளது.

அதாவது வயது வந்த பெண்ணின் உடலில் இருக்கக் கூடிய ஹார்மோன்கள் அவரது உடலில் இருந்தது. மேலும் பெண்களுக்கு இருப்பதை போன்று பிறப்புறுப்பும் இருந்துள்ளது.

மாதவிடாய் சுழற்சி

இதனால்தான் அவருக்கு 13 ஆவது வயதில் அவர் பூப்படைந்த நிலையில் தொடர்ந்து 20 ஆண்டுகள் மாதவிடாய் சுழற்சி வந்துள்ளது. ஆனால் அதை சிறுநீரக பிரச்சினை என தவறாக புரிந்து கொண்டார்.

இதையடுத்து அவருக்கு பெண்ணின் பிறப்புறுப்பை அகற்றமுடிவு செய்யப்பட்டது. தற்போதைக்கு பெண் பிறப்புறுப்பை அகற்றிவிடலாம் என்றார். இதையடுத்து 3 பேர் கொண்ட மருத்துவக் குழுவினர் 3 மணி நேரமாக அவரது கர்ப்பப்பையை கடந்த மாதம் அகற்றிவிட்டனர்.

 கர்ப்பப்பை 

இதையடுத்து அவர் தற்போது ரத்த போக்கு பிரச்சினையில் இருந்து முற்றிலுமாக வெளியே வந்துள்ளார். இதுகுறித்து அவருக்கு சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்கள் கூறுகையில் அவருடைய கர்ப்பப்பை நல்ல நிலையில் வளர்ந்திருந்தது.

அவர் பெண்ணாக மாற விரும்பியிருந்தாலும் அவரால் குழந்தை பெற்றுக் கொள்ளும் அளவுக்கு அந்த கர்ப்பப்பை இருந்தது என தெரிவித்தனர்.

ரெளடி பேபி பாடலின் போது எனக்கு மாதவிடாய் நாள்தான்.. சாய்பல்லவி ஓபன் டாக்!