எதிரிக்கு வச்ச பொறி; தானே சிக்கிய சீனா - கடலுக்கடியில் சங்கிலியால் 55 பேர் பலி!
அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் சிக்கியதில், சீன வீரர்கள் 55 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
சிக்கிய கப்பல்
சீனாவின் மஞ்சள் ஆறு அருகே சீனக் கடற்படையால், அமெரிக்க மற்றும் பிரிட்டிஷ் கப்பல்களுக்கு வைக்கப்பட்ட பொறியில், அந்த நாட்டின் அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல் சிக்கியதில், சீன வீரர்கள் 55 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.
இதனை பிரபல பத்திரிகை நிறுவனம் வெளியிட்டிருக்கிறது. ஆனால், இதனை சீனா திட்டவட்டமாக மறுத்து, தங்கள் நீர்மூழ்கிக் கப்பல் அப்படியானதொரு விபத்தில் சிக்கி, அதில் யாரும் உயிரிழக்கவில்லை எனக் கூறியுள்ளது.
55 பேர் பலி?
நீர்மூழ்கிக் கப்பல், சீனக் கடற்படை அமைத்திருந்த சங்கிலி மற்றும் நங்கூரத்தில் மோதி விபத்துக்குள்ளாகியிருக்கிறது. இதில் ஏற்பட்ட கணினி தொழில்நுட்பக் கோளாறு மற்றும் கப்பல் சேதத்தைச் சரிசெய்வதற்கு 6 மணி நேரத்துக்கு மேல் ஆகியிருக்கிறது.
ஆனால், ஆக்சிஜன் அமைப்பில் ஏற்பட்ட தீவிர சேதத்தின் காரணமாக இந்த மரணங்கள் ஏற்பட்டிருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.