கடலில் நீந்தப்போகும் மிகப்பெரிய ‘வாகீர்’ நீர்மூழ்கிக் கப்பல் - வைரலாகும் புகைப்படம்...!

Viral Video Mumbai
By Nandhini Jan 21, 2023 05:42 AM GMT
Report

மிகப்பெரிய ‘வாகீர்’ நீர்மூழ்கிக் கப்பல்

மும்பை, 5-வது கல்வாரி வகை 'வாகீர்' என்ற நீர்மூழ்கிக் கப்பல் வரும் 23ம் தேதி அன்று இந்தியக் கடற்படையில் கடலில் நீந்த உள்ளது.

இதனையடுத்து, இந்த நீர்மூழ்கிக் கப்பல் மும்பையில் உள்ள மசாகன் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் உள்நாட்டிலேயே கட்டப்பட்டுள்ளது.

இது குறித்து அதிகாரி எஸ்.திவாகர் கூறுகையில்,

INS வாகீர் நீர்மூழ்கி கப்பல் கடற்படை மற்றும் நாட்டின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய உள்ளது. நாட்டின் வளர்ச்சிக்கு இந்த கப்பல் ஒரு பெரிய படியாக அமைய உள்ளது. இது 5வது கல்வாரி வகை நீர்மூழ்கிக் கப்பலாகும்.

வாகீர் கட்டுமானத்தை MDL (Mazagon Dock Shipbuilders Limited) நிறுவனம் முழுவதுமாக செய்து இந்திய கடற்படையால் மேற்பார்வை செய்தது பெருமைக்குரியது. பெரும்பாலான சோதனைகள் கடற்படை மற்றும் MDL இணைந்து மேற்கொண்டன என்றார்.