பள்ளி குழந்தைகளுக்கு சாப்பாட்டில் விஷம் - கொடூர ஆசிரியைக்கு தூக்கு!
மாணவர்களுக்கு விஷம் கொடுத்த பள்ளி ஆசிரியருக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.
சாப்பாட்டில் விஷம்
சீனா, மத்தியப் பகுதியில் மழலைகள் பள்ளியில் ஆசிரியராக இருந்தவர் வாங் யுன்(39). இவருக்கும், மற்றொரு பெண் ஆசிரியர் ஒருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இதனால், அவர் பழிவாங்கும் நோக்கில் குழந்தைகள் சாப்பிடும் உணவில் சோடியம் நைட்ரைட் என்னும் வேதிப் பொருளை கலந்துள்ளார். இதனால் ஒரு குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. மேலும் 24 குழந்தைளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
ஆசிரியைக்கு தூக்கு
அதனையடுத்து, இதுகுறித்த புகாரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த இல் ஹெனான் மாகாணத்தில் உள்ள ஜியாவோசு நீதிமன்றம் அவருக்குக் கடந்த 2020ஆம் ஆண்டிலேயே தூக்குத் தண்டனையை வழங்கியது.
அதனை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்தார். ஆனால் அவரது மேல்முறையீடு நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை வாங் யுனுக்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.
தொடர்ந்து, அரசு பள்ளிகளின் மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்தி மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.