டேட்டிங், லவ் எல்லாம் ஓகே.. ஆனால் அதுமட்டும் வேண்டாம் - இளம் தலைமுறையினர் முடிவால் தவிக்கும் நாடு!
மக்கள் தொகை சரிவால் சீனா தத்தளித்து வருகிறது.
மக்கள் தொகை
சீனாவில், மக்கள் தொகை சரிவால், வேலை பார்க்கும் வயதில் உள்ள ஆட்கள் குறையத் தொடங்கினர். தொடர்ந்து, மக்கள் தொகையை மீண்டும் அதிகரிக்க பல்வேறு திட்டங்களை அறிவித்தது.
அதன்படி, அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ளும் தம்பதிகளுக்கு வரிச்சலுகை, வீடு கட்ட மானியம், இலவச கல்வி என அறிவிக்கப்பட்டது.
தவிக்கும் அரசு
மேலும், மாணவ, மாணவிகள் காதலிப்பதற்கு ஏதுவாக மாதத்திற்கு ஒரு வாரம் கல்லூரிகளில் சிறப்பு விடுமுறைகள் வழங்கப்பட்டன. ஆனால், அவர்கள் அவுட்டிங், டேட்டிங், லிவ் இன் உறவோடு அதனை முடித்துக் கொள்கின்றனர்.
இதன் விளைவாக, அந்நாட்டில் திருமணம் செய்வோர் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது. பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வு, குடும்பப் பொறுப்பை ஏற்க அச்சம் என இளைஞர்கல் திருமணத்தை தட்டிக்கழிக்கின்றனர். இதனை சமாளிக்க திருமணம் ஆகாத பெண்களும், செயற்கை கருவுற்றல் மூலம் குழந்தை பெற்றுக் கொள்ள சீன அரசு அனுமதி வழங்கியது.
திருமணம் ஆகாத பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால் எதற்கும் எந்த பலனும் இல்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், திருமணம், மகப்பேறு, குழந்தை வளர்ப்பு குறித்து எடுத்துரைத்தார். திருமணம் மற்றும் குடும்பத்தின் முக்கியத்துவம் பற்றி இளம் தலைமுறையினருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு சீன அதிபர் வலியுறுத்தியுள்ளார்.