வருங்கால மருமகனிடம் 33 லட்சம் வரதட்சனை கேட்ட மாமியார் - கதறிய இளைஞர்!
இளைஞர் ஒருவர், தன்னுடைய வருங்கால மாமியார் வரதட்சனை கேட்டதாக புகாரளித்துள்ளார்.
மணமகள் விலை
சீனாவில், பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் விதமாக திருமணங்களில் கைலி அல்லது நிச்சயதார்த்த பரிசு எனும் நடைமுறையை அரசு ஊக்குவித்து வருகிறது. கைலி எனும் இந்தப் பாரம்பர்ய நடைமுறையில், மணமகன் திருமணம் செய்துகொள்ளவிருக்கும்
மணப்பெண்ணின் குடும்பத்தினருக்கு `மணமகள் விலை' என்ற பெயரில் வரதட்சணை கொடுக்க வேண்டும். அந்த வகையில், மணமகளின் தாயார் வரதட்சணை கேட்டதாக லியு என்ற குடும்பப் பெயர் கொண்ட இளைஞர் ஒருவர் மேயரிடம் புகாரளித்துள்ளார்.
கதறும் இளைஞர்
அதில், நானும் என்னுடைய காதலியும் திருமணம் செய்துகொள்ள விரும்புவதை அறிந்த காதலியின் தாயார், திருமணத்துக்கு உள்ளூர் வழக்கப்படி மணமகளின் குறைந்தபட்ச விலையான 2,88,000 யுவானைத் (ரூ.33 லட்சம்) தர வேண்டும் என்றார். வீடு, கார்கூட எதுவும் குறிப்பிடவில்லை.
எங்கள் கவுன்ட்டியில் மணமகளின் விலை 1,20,000 யுவான் (ரூ.13.74 லட்சம்) மட்டுமே. இருப்பினும், நானும் என் காதலியும் ஒருவருக்கொருவர் விரும்புவதால், எங்களின் குடும்பத்தால் அவ்வளவு வரதட்சணை தர முடியாது என்று கூற தைரியம் வரவில்லை.
எனவே இதற்கு நடவடிக்கை எடுத்து சமாதானப்படுத்துனாறு தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்து நிர்வாகம், `கவுன்ட்டியில் மணமகளின் விலை குறைந்தவண்ணம் இருக்கிறது. இனிவரும் காலங்களில் அதை மேலும் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்துள்ளது.