இனி சிறுநீர் பரிசோதனைக்காக மருத்துவமனை செல்லவேண்டாம் - 2 நிமிடத்தில் சோதனை செய்யும் நவீன மெஷின் கண்டுபிடிப்பு!

China World
By Vinothini Jul 13, 2023 01:56 PM GMT
Vinothini

Vinothini

in உலகம்
Report

சீனாவில் சிறுநீர் பரிசோதனை செய்வதற்காக புதிய ஆட்டோமேட்டிக் மெஷின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

புதிய கண்டுபிடிப்பு

சீன நாடு அதன் நவீனத்துவத்திற்கு பெயர் பெற்றது, இங்கு பல தனித்துவமான மற்றும் நவீன கண்டுப்பிடிப்புகளை இங்கு காணலாம். தற்பொழுது இங்கு சிறுநீர் சோதனைக்காக புதிய ஆட்டோமேட்டிக் மெஷின் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர், அது பேசுபொருளாகியுள்ளது.

china-discovered-new-high-tech-urinal-test-machine

அந்த மெஷினில் சிறுநீர் கழித்த பிறகு, எளிதாக பரிசோதனை செய்துக்கொள்ளமுடியும். பின்னர், அதன் பயன்பாட்டிற்கு ஒரு விலை கொடுக்கவேண்டும். மேலும், ஆடிட்டி சென்ட்ரல் நியூஸ் இணையதளத்தின் அறிக்கையின்படி, பெய்ஜிங் உட்பட பல பொது இடங்களில் இந்த நவீன மெஷினை நிறுவப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நவீன சோதனை மெஷின்

இதனை தொடர்ந்து, இந்த சிறுநீர் கழிப்பறைகள் மால்கள் மற்றும் சுற்றுலா இடங்களிலும் நிறுவப்பட்டுள்ளன. இதில் சிறுநீர் கழிக்கும் போது, ​​யாராவது விரும்பினால், தன் சிறுநீரையும் பரிசோதனை செய்து கொள்ளலாம். மேலும், இது ஹைடெக் சிறுநீர் கழிப்பிடம் டிஜிட்டல் டிஸ்ப்ளே மற்றும் உள்ளமைக்கப்பட்ட கட்டண முறையைக் கொண்டுள்ளது.

china-discovered-new-high-tech-urinal-test-machine

இதில் சிறுநீரில் இருக்கும் கால்சியம், குளுக்கோஸ், புரதம், கீட்டோன், அஸ்கார்பேட் போன்றவற்றை இதன் மூலம் எளிதாக பரிசோதிக்க முடியும். மேலும், இதனை பயன்படுத்தும் போது, ​​QR குறியீட்டுடன் ஒரு செய்தி திரையில் தோன்றும். அதில் ‘சிறுநீர் கழித்த பிறகு சிறுநீர் பரிசோதனை அறிக்கை கிடைக்கும், அதற்கு நீங்கள் பணம் செலுத்துவீர்களா?’ எனக் கேட்கும்.

நீங்கள் பணம் செலுத்த QR குறியீட்டை ஸ்கேன் செய்யலாம். குறியீட்டை ஸ்கேன் செய்து பணம் செலுத்தியதை உறுதிசெய்த பிறகு, சோதனை சுமார் 2 நிமிடங்களில் நிறைவடையும். அறிக்கையின்படி தேவையான கட்டணம் ரூ 230. இந்த செலவு மருத்துவமனை சிறுநீர் பரிசோதனையை விட மிகவும் மலிவானது என்று கூறப்படுகிறது.