தலையில் சிக்கிய பாத்திரம்; நீண்ட நேரம் போராடிய பெற்றோர் - குழந்தையின் நிலை?

Chennai
By Sumathi Mar 25, 2024 04:32 AM GMT
Report

தலையில் பாத்திரம் சிக்கியிருந்த நிலையில் குழந்தை மீட்கப்பட்டது.

சிக்கிய பாத்திரம்

சென்னை போரூர் மங்களா நகரைச் சேர்ந்தவர்கள் கார்த்திக் - ஆனந்தி தம்பதி. இவர்களுக்கு கிருத்திக் என்ற ஒன்றரை வயது மகன் உள்ளார். இவர் வழக்கம்போல் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.

கிருத்திக்

அப்போது, சமையலறையில் இருந்த பாத்திரத்தை தலையில் வைத்து விளையாண்ட போது அந்த பாத்திரம் எதிர்பாராத விதமாக குழந்தையின் தலையில் சிக்கிக் கொண்டது.

300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 52 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு

300 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை 52 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு

குழந்தை மீட்பு

உடனே குழந்தை விடாமல் அழுதுள்ளது. குழந்தையின் தலையில் சிக்கிய பாத்திரத்தை எடுக்க முடியாமல் பெற்றோர் நீண்ட நேரம் போராடி வந்துள்ளனர். இதனால், உடனே மதுரவாயல் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலையில் சிக்கிய பாத்திரம்; நீண்ட நேரம் போராடிய பெற்றோர் - குழந்தையின் நிலை? | Child Safely Rescued From Vessel Porur

தகவல் அறிந்து விரைந்த அவர்கள், குழந்தையின் தலையில் சிக்கியிருந்த பாத்திரத்தை ராட்சத கத்திரி கொண்டு லாவகமாக வெட்டியெடுத்து குழந்தையை மீட்டனர்.