பாத்திரத்தில் தலையை விட்ட ஒன்றரை வயது குழந்தை... - அடுத்து நடந்த விபரீதம்...!

Ramanathapuram
By Nandhini Aug 19, 2022 07:28 AM GMT
Report

இராமநாதபுரத்தில் ஒன்றரை வயது குழந்தை ஒன்று பாத்திரத்தில் தலையை விட்டு மாட்டிக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாத்திரத்தில் தலையை விட்ட குழந்தை 

இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே கிளாக்குளத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி. இவருடைய மனைவி வனிதா. இவர்களுக்கு ஒன்றரை வயதில் அஜித் என்ற குழந்தை உள்ளது. இந்நிலையில், அஜித் வீட்டில் சமையலறையில் இருந்த பாத்திரத்தை எடுத்து நீண்ட நேரமாக விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது, பாத்திரத்தை தலையில் வைத்து அஜித் விளையாடிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக அந்த பாத்திரம் குழந்தையின் தலையில் மாட்டிக் கொண்டது. இதனால் அஜித் அலறித் துடித்தான்.

குழந்தையின் அழுகைக் குரல் கேட்டு, பதறி அடித்து ஓடி வந்து வனிதா பார்த்தார். அப்போது குழந்தையின் தலையில் பாத்திரம் மாட்டி கத்தி அழுதுக்கொண்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

child-head-pot

சுமார் 1 மணி நேரம் போராட்டம்

அந்த பாத்திரத்தை குழந்தையின் தலையிலிருந்து எடுக்க வனிதா முயற்சி செய்தார். ஆனால், முடியவில்லை. இதனையடுத்து, அக்கம், பக்கத்தினரை கூப்பிட்டு வந்து பாத்திரத்தை குழந்தை தலையிலிருந்து எடுக்க முயற்சி செய்தார். ஆனாலும் முடியவில்லை.

இதனையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், சுமார் 1 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு குழந்தையின் தலையிலிருந்து பாத்திரம் வெட்டி அகற்றினர்.