நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் - செவிலியர் கொடூரமாக பாலியல் வன்கொடுமை!

Sexual harassment Chhattisgarh Crime
By Sumathi Oct 23, 2022 08:51 AM GMT
Report

சுகாதார மையத்தில் செவிலியர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 கூட்டு பாலியல் வன்கொடுமை

சத்தீஸ்கர், மகேந்திரகர் மாவட்டத்தில் உள்ள சிப்சிபி என்ற கிராமத்தில் சுகாதார மையம் ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்கு செவிலியர் ஒருவர் வழக்கம்போல் பணியில் இருந்துள்ளார். அப்போது அங்கே திடீரென நுழைந்த மர்ம கும்பல் செவிலியரைக் கட்டி போட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் - செவிலியர் கொடூரமாக பாலியல் வன்கொடுமை! | Chhattisgarh Nurse Gang Raped At Health Centre

மேலும் அதனை வீடியோவாகவும் எடுத்துள்ளனர். தொடர்ந்து இந்தச் சம்பவத்தை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர். அதனையடுத்து இது குறித்து அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதன் பின் போலீஸிடம் புகாரளித்தனர்.

பாஜக போராட்டம்

அதன் அடிப்படையில், இதில் தொடர்புடைய மைனர் சிறுவன் உட்பட மூன்று குற்றவாளிகளை போலீசார் கைது செய்து உள்ளனர். மேலும், தப்பியோடிய ஒருவரைத் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்தச் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்,

நள்ளிரவில் புகுந்த மர்ம நபர்கள் - செவிலியர் கொடூரமாக பாலியல் வன்கொடுமை! | Chhattisgarh Nurse Gang Raped At Health Centre

பேஷ் பாகேல் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், சட்ட ஒழுங்கு மிக மோசமான நிலையில் உள்ளதாகக் கூறி பாஜகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், அங்குத் தொலைதூர இடங்களில் பணிபுரியும் சுகாதார ஊழியர்கள் குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.